4 1
உலகம்செய்திகள்

5,638 நீண்ட தூர ட்ரோன்களை ஒரே மாதத்தில் ஏவிய ரஷ்யா: தீவிரமடையும் தாக்குதல்

Share

உக்ரைன் மீது செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக தெரிய வந்துள்ளது.

ரஷ்யா செப்டம்பர் மாதத்தில் உக்ரைன் மீது தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது என AFP பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உடனான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறியதுடன் தாக்குதலைத் தொடரவும் ரஷ்யா சபதம் செய்தது.

இந்த நிலையில்தான் ஆகத்து மாதத்துடன் ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிக தாக்குதலை செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா நடத்தியது தெரிய வந்துள்ளது.

ஒரே மாதத்தில் சுமார் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது. அதேபோல் நேட்டோ நாடுகளின் வான்வெளியில் அத்துமீறியது.

அதனைத் தொடர்ந்து நேட்டோ மாதம் முழுவதும் அதன் கிழக்கு எல்லைகளில் அதன் பாதுகாப்பை அதிகரித்தது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...