4 1
உலகம்செய்திகள்

5,638 நீண்ட தூர ட்ரோன்களை ஒரே மாதத்தில் ஏவிய ரஷ்யா: தீவிரமடையும் தாக்குதல்

Share

உக்ரைன் மீது செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக தெரிய வந்துள்ளது.

ரஷ்யா செப்டம்பர் மாதத்தில் உக்ரைன் மீது தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது என AFP பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உடனான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறியதுடன் தாக்குதலைத் தொடரவும் ரஷ்யா சபதம் செய்தது.

இந்த நிலையில்தான் ஆகத்து மாதத்துடன் ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிக தாக்குதலை செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா நடத்தியது தெரிய வந்துள்ளது.

ஒரே மாதத்தில் சுமார் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது. அதேபோல் நேட்டோ நாடுகளின் வான்வெளியில் அத்துமீறியது.

அதனைத் தொடர்ந்து நேட்டோ மாதம் முழுவதும் அதன் கிழக்கு எல்லைகளில் அதன் பாதுகாப்பை அதிகரித்தது.

Share
தொடர்புடையது
11 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்

இலங்கையிலேயே விசர்நாய் கடியை (Rabies) முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற சிறப்பு அந்தஸ்தை அநுராதபுரம்...

12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள்...

13 2
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக குழுக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அநுர அரசு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் U.F உட்லர், ரஷ்யாவில் ஒரு பாடநெறிக்காக நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்...

10 2
இந்தியாசெய்திகள்

விஜய்யின் கைது விவகாரம்! தமிழ்நாட்டின் முக்கிய சட்டத்தரணி வெளிப்படை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்களாயின் அது அரசியல்...