tamilni 627 scaled
உலகம்செய்திகள்

”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு விமர்சனம்

Share

”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு விமர்சனம்

கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் கூறிய ஓற்றை வார்த்தையால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

அண்மையில், இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் உக்ரைனுக்கு கனடா வழங்கிய உதவிகள் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் வினவப்பட்டது.

இதன் போது உக்ரைனுக்கு கனடா வழங்கிய நிதியுதவி, பொருளுதவி உட்பட ஆயுத உதவிவரை அனைத்தையும் விவரித்த ட்ரூடோ ஈற்றில் போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தவறுதலாக கூறிவிட்டார்.

பின்னர் உடனடியாக மன்னிப்புக்கோரி போரில் உக்ரைன் தான் வெற்றி பெற வேண்டும் என கூறியிருந்த போதும் அவர் முதலில் கூறிய வார்த்தைகளால் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

அவரை இணையவாசிகள் கடுமையாக கேலி செய்துவரும் நிலையில், இவர்தான் ஜோ பைடனின் இன்னோர் சாயல் அவரைப்போலவே மறந்து பேசுகிறார் என்று என ஒருவர் விமர்சித்துள்ளார்.

இதேபோல இன்னொருவரும், ட்ரூடோ தனது மனதிலுள்ள விருப்பத்தை வெளியே வெளிப்படையாக கூறிவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் காணொளியை பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ட்ரூடோ, போரில் ரஷ்யா வெற்றி பெற்றேயாக வேண்டும், மன்னிக்கவும், ரஷ்யாவுக்கெதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற்றேயாகவேண்டும் என்று கூறும் காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...