8 வயது சிறுமியுடன் இணைந்து புடின் செய்த செயல்
உலகம்செய்திகள்

8 வயது சிறுமியுடன் இணைந்து புடின் செய்த செயல்

Share

8 வயது சிறுமியுடன் இணைந்து புடின் செய்த செயல்

8 வயது சிறுமியுடன் இணைந்து நிதியமைச்சரிடம் நிதி ஒதுக்கீடு குறித்து தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாஸ்கோ-வால் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று தாகெஸ்தான் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை கிரெம்ளினுக்கு வரவேற்றார்.

அத்துடன் நிதியமைச்சர் உடனான வழக்கத்துக்கு மாறான தன்னுடைய தொலைபேசியில் அழைப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சிறுமியின் சொந்த பகுதிக்கான பட்ஜெட் மானியம் தொடர்பான விவரங்களை நேரடியாக கேட்க செய்தார்.

நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ் தொலைபேசி அழைப்பில் முதலில் சிறுமியின் வரவேற்பை கேட்டு வியப்படைந்தார் மற்றும் உடனடியாக பதிலளிக்க தவறினார்.

ஆனால் இறுதியில் தெற்கு ரஷ்யாவில் உள்ள சிறுமியின் சொந்த பகுதிக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறுமியிடம் கூறுவதற்கு முன்பு தாகெஸ்தான் பகுதிக்கு 5 பில்லியன் ரூபிள் (£43.7 மில்லியன்) கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

இந்த தொலைபேசி அழைப்பின் போது புன்னகையுடன் இருந்த ரஷ்ய ஜனாதிபதி புடின், அடுத்து ரஷ்யாவின் பிரதமர் மைக்கேல் மிஷூஸ்டினுக்கு அழைப்பு விடுத்த போதும் 8 வயது சிறுமி ரைசட் அகிபோவா-வை(Raisat Akipova) அருகில் அமர வைத்து இருந்தார்.

கடந்த மாதம் வாக்னர் படையுடன் ஏற்பட்ட சலசலப்புக்கு பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 8 வயது சிறுமி ரைசட் அகிபோவா-வை வரவேற்பது போன்ற வீடியோ காட்சிகள் மாஸ்கோவால் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நாட்டு மக்கள் மீதான ரஷ்ய ஜனாதிபதியின் அக்கறை, நேசம் மற்றும் தன்னுடைய கட்டுப்பாடு போன்றவற்றை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தொலைபேசி அழைப்பின் போது கையில் பூங்கொத்துடன் நின்ற சிறுமி, ஜனாதிபதியின் புடின் வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர் சிலுவானோவுக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் தாகெஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததை தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்துள்ளது, அப்போது வழக்கத்துக்கு மாறாக ஜனாதிபதி புடின் நிறைய மக்கள் கூட்டத்துடன் கலந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...