23 6550b75eb528a
உலகம்செய்திகள்

காஸாவில் களமிறங்கிய ரஷ்யா… 60 பேர் எகிப்துக்கு வெளியேற்றம்

Share

காஸாவில் களமிறங்கிய ரஷ்யா… 60 பேர் எகிப்துக்கு வெளியேற்றம்

காசா பகுதியில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ள நிலையில் 60 க்கும் மேற்பட்ட ரஷ்ய கடவுச்சீட்டு தாரர்கள் எகிப்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு தாரர்களை வெளியேற்றும் பணி நவம்பர் 1ம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் மட்டும் எகிப்து எல்லை திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவசர சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீன மக்களும் எகிப்துக்கு செல்ல எல்லையில் காத்திருக்கும் சூழல் உருவானது. இது அந்த நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பலமுறை எல்லையை கட்டாயமாக மூடும் நிலைக்கு எகிப்து தள்ளப்பட்டது. இந்த நிலையில் ஞாயிறன்று எகிப்து எல்லை திறக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

தற்போது காஸாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள ரஷ்யர்கள் எகிப்துக்கு கடந்துள்ளனர். மேலும், உளவியல் ஆலோசனை, உணவு மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய குடிமக்கள் கெய்ரோவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அங்கிருந்து ரஷ்யா பயணப்பட தேவையான ஆவணங்களை உறுதி செய்ய அதிகாரிகள் உதவுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 60 பேர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மொத்தம் 1,000 பேர்கள் காஸாவில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...

image 1000x630 11
செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு: 10 பேருக்கு எதிராக இன்று வழக்கு விசாரணை ஆரம்பம் – சுமந்திரன் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்,...

image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான்...