இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப் பரிமாற்றம்) என்ற முக்கிய இராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் சட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று (டிசம்பர் 15) கையெழுத்திட்டுள்ளார்.
இந்த இராணுவ ஒப்பந்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை சட்டமாக்குவதற்கான செயல்முறை ரஷ்ய பாராளுமன்றத்தில் பின்வருமாறு நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும். இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா தனது இராணுவ வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும். இதைப்போலவே, இந்தியாவும் தனது இராணுவத் தளவாடங்களை ரஷ்யாவுக்கு வழங்கும்.
இந்த இராணுவப் பொருட்கள் மற்றும் சேவைகள், குறிப்பாக கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் பிற அத்தியாவசிய பணிகளில் பயன்படுத்தப்படும் என ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது இந்தியாவின் படைகள் ரஷ்யா செல்வதற்கும் வழிவகை செய்வதோடு, இருநாட்டு இராணுவ ஒத்துழைப்புக்குப் புதிய பாதையை அமைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.