1 34
உலகம்செய்திகள்

உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா: உடன் வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

Share

உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா: உடன் வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

உக்ரைனின் (Ukraine) முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை (Pokrovsk) ரஷ்ய (Russia) படைகள் ஆக்கிரமித்து வருகின்ற நிலையில் அங்குள்ள மக்களை உக்ரைன் உடனடியாக நகரைவிட்டு வெளியேற்றி வருகின்றது.

இந்நிலையில், மக்கள் அந்நகரை விட்டு வெளியேறும் மிக பரிதாபகரமான காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சுமார் 53,000 பேர் வசித்து வரும் குறித்த பகுதியில் ரஷ்ய படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக உக்ரைன் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது.

முன்னதாக, ரஷ்யாவின் குர்ஸ்க் (Russia – Kursk) பிராந்தியத்தில் உள்ள ஒரு முக்கியமான பாலத்தின் மீது உக்ரைன் (Ukraine) தாக்குதல் மேற்கொண்டது.

குறித்த பாலத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் (US) பெற்றுக்கொண்ட ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், தற்போது உக்ரைனின் முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...