1 34
உலகம்செய்திகள்

உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா: உடன் வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

Share

உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா: உடன் வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

உக்ரைனின் (Ukraine) முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை (Pokrovsk) ரஷ்ய (Russia) படைகள் ஆக்கிரமித்து வருகின்ற நிலையில் அங்குள்ள மக்களை உக்ரைன் உடனடியாக நகரைவிட்டு வெளியேற்றி வருகின்றது.

இந்நிலையில், மக்கள் அந்நகரை விட்டு வெளியேறும் மிக பரிதாபகரமான காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சுமார் 53,000 பேர் வசித்து வரும் குறித்த பகுதியில் ரஷ்ய படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக உக்ரைன் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது.

முன்னதாக, ரஷ்யாவின் குர்ஸ்க் (Russia – Kursk) பிராந்தியத்தில் உள்ள ஒரு முக்கியமான பாலத்தின் மீது உக்ரைன் (Ukraine) தாக்குதல் மேற்கொண்டது.

குறித்த பாலத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் (US) பெற்றுக்கொண்ட ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், தற்போது உக்ரைனின் முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...