24 6637c743b7038
உலகம்செய்திகள்

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

Share

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

உக்ரைனின்(Ukraine) இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா(Russia) ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியு்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலில் கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்நிலையில் உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்துள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கார்கிவ் பிராந்திய கவர்னர் சினி ஹுபோவ் கூறும்போது, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கீழே விழுந்த ஆளில்லா விமானங்களால் பெரிய அளவில் தீப்பிடித்தது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...