24 6637c743b7038
உலகம்செய்திகள்

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

Share

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

உக்ரைனின்(Ukraine) இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா(Russia) ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியு்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலில் கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்நிலையில் உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்துள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கார்கிவ் பிராந்திய கவர்னர் சினி ஹுபோவ் கூறும்போது, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கீழே விழுந்த ஆளில்லா விமானங்களால் பெரிய அளவில் தீப்பிடித்தது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
17 8
செய்திகள்உலகம்

எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டுடன் போர்ச் சூழலை எதிர்கொள்ளும் தென்கொரியா: வரலாற்றுத் தீர்மானம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள...

16 8
இலங்கைஅரசியல்செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணை ஆரம்பம்!

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது ‘சதொச’ நிறுவனம் ஊடாக முறையற்ற வகையில் பலகைகளை இறக்குமதி...

15 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு: இலங்கையின் பொருளாதாரத் தயார்நிலை குறித்து ஆளுநர் விளக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

14 8
செய்திகள்உலகம்

வடக்கு சைப்பிரஸில் துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச்சூழல் காரணமாக, பிராந்தியப்...