24 6642fb33393b2
உலகம்செய்திகள்

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம்

Share

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம்

ஈரானின் மூலோபாய துறைமுகமான சபாஹரை இயக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய நிறுவனங்கள் பொருளாதார தடைகளுக்கு உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நீண்ட கால ஒப்பந்தத்தில் இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (Indian Ports Global Limited (IPGL) மற்றும் ஈரானின் போர்ட் அன்ட் கடல்சார் அமைப்பு (the Port & Maritime Organisation of Iran.) என்பன நேற்று கையெழுத்திட்டன.

10 ஆண்டு ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளும் கையெழுத்திட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், தெஹ்ரானில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்கள் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஓமன் வளைகுடாவில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஈரானியத் துறைமுகம், பாகிஸ்தானைக் கடந்து, நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை அடைய இந்தியப் பொருட்களுக்கு நுழைவாயிலை வழங்கும்.

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் இந்த துறைமுகத்தின் வளர்ச்சியைக் குறைத்தன

இந்த துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் ஐபிஜிஎல் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும், மேலும் 250 மில்லியன் டொலர் கடனாக திரட்டப்படும்.

இந்நிலையில், எந்த ஒரு நிறுவனமும் – எவரும் – ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களில் அக்கறை கொண்டால், பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து குறித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...