24 6642ad8d1d5a2
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மோட்டார் சைக்கிள்களில் இரவில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Share

கொழும்பில் மோட்டார் சைக்கிள்களில் இரவில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கொழும்பு பிரதான வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி கல்லுப்பாறை மற்றும் டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் பொழுதுபோக்கிற்காக அஜாக்கிரதையாகவும், அபாயகரமாகவும் இளைஞர்கள் குழு மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு திசையில் மாத்திரம் வாகனங்கள் செல்லும் குறித்த வீதியில் ஒழுக்கமற்ற முறையில் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடமிருந்து பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழுவினரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு மத்தியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாகவும் சைக்கிளின் பின் சக்கரத்தை மாத்திரம் செலுத்தி சாகசம் காட்டி ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...