vikatan 2022 07 870876e5 677b 49fd 9265 033749ca67fb 62d0d66048280
உலகம்செய்திகள்

Facebook விளம்பரத்திற்கு மட்டும் பெருந்தொகையை செலவிடும் ரிஷி சுனக்: எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்

Share

ஆட்சியில் நீடிக்கும் பொருட்டு Facebook விளம்பரத்திற்கு மட்டும் பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகையை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தல் விளம்பரத்திற்காக செலவிடும் தொகையை விடவும் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் தேர்தலுக்காக ஒரு கட்சி 35 மில்லியன் பவுண்டுகள் வரையில் செலவிடலாம் என ஆளும் கட்சி முடிவு செய்துள்ள நிலையிலேயே பிரதமர் ரிஷி சுனக்கின் இந்த விளம்பரம் தொடர்பான தரவுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஆனால் இப்படியானமாற்றங்கள் அரசியல் நன்கொடைகளின் வெளிப்படைத் தன்மையையும் தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்த வாய்ப்பிருப்பதாக தேர்தல் கண்காணிக்கும் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேர்தல் விளம்பரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளனர். குறிப்பாக ரிஷி சுனக் பேஸ்புக் பக்கத்தில் மட்டும் 104,500 பவுண்டுகள் செலவிட்டு விளம்பரம் முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் இதே டிசம்பர் மாதத்தில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செலவிட்ட தொகை வெறும் 87,229 பவுண்டுகள் என்றே தெரியவந்துள்ளது. இதேவேளை லேபர் கட்சியினர் தங்களது முதன்மையான பேஸ்புக் பக்கத்தில் விளம்பரத்திற்காக 26,399 பவுண்டுகள் மட்டுமே செலவிட்டுள்ளனர்.

அத்துடன் கீர் ஸ்டார்மரின் பேஸ்புக் பக்கத்தில் 4,436 பவுண்டுகள் செலவிட்டு விளம்பரம் செய்துள்ளனர். முன்னதாக, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தேர்தல் முன்னெடுக்கப்படலாம் என்று தான் எதிர்பார்ப்பதாக ரிஷி சுனக் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் தேர்தல் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு நவம்பரில் பிரித்தானியாவில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சிலர் ஊகிக்கிறார்கள். 2016 தேர்தலில் பேஸ்புக் விளம்பரத்திற்காக மட்டும் பல மில்லியன் செலவிட்டு அதில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றியும் கண்டுள்ளார்.

ஆனால் தற்போது டிரம்பை விடவும் அதிக தொகையை ரிஷி சுனக் செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் ரிஷி சுனக்கின் பேஸ்புக் பக்கமானது நாளுக்கு 15,000 பவுண்டுகள் விளம்பரத்திற்காக செலவிடுகிறது,

அத்துடன் தேர்தல் பரப்புரை தொடர்பிலான அண்மை தகவல்களுக்கு தமது பேஸ்புக் பக்கத்தை பின் தொடரவும் கோருகிறது. நவம்பர் மாதத்தில் தான், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்காக 35 மில்லியன் பவுண்டுகள் வரையில் செலவிடலாம் என்று அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னர் ஓவ்வொரு தொகுதிக்கும் ஒரு கட்சி 30,000 பவுண்டுகள் வரையில் செலவிடலாம் என இருந்தது. இதனால் மொத்தமாக 19.5 மில்லியன் பவுண்டுகள் ஒவ்வொரு கட்சியும் செலவிட நேர்ந்தது.

கன்சர்வேட்டிவ் கட்சி மட்டும் 2019 தேர்தலில் 16.5 மில்லியன் பவுண்டுகள் தொகையை செலவிட்டுள்ளது. ஆனால் 2024 தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி கண்டிப்பாக பெருந்தொகையை செலவிடும் என்றே கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...