13 4
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் வெடிக்கும் கலவரம்: அவசர கோப்ராவை கூட்டிய ஸ்டார்மர்

Share

பிரித்தானியாவில் வெடிக்கும் கலவரம்: அவசர கோப்ராவை கூட்டிய ஸ்டார்மர்

பிரித்தானியாவில் (UK) வலதுசாரி கலவரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் செயலாளர்கள் அடங்கிய அவசர கோப்ரா (COBRA) கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.

நாட்டின் அவசர சூழ்நிலைகளைப் பரிசீலிப்பதற்காக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் செயலாளர்கள் ஒன்றுகூடும் அவசர கட்டமைப்பே COBRA (Cabinet Office Briefing Room A) எனப்படுகின்றது.

அண்மைய ஆண்டுகளில் பிரித்தானியா கண்ட மிக மோசமான கலவரங்களில் ஒன்றான இந்த வலதுசாரி கலவரத்தின் போது பலர் கைது செய்யப்பட்டு வருவதுடன் நிலைமை மிகவும் தீவிரமடைந்து வருகின்றது.

இதற்கிடையில் அவசர கோப்ரா கூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ள வலதுசாரி வன்முறைகளுக்கு எதிரான சவால்களை சமாளிக்கவும், ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் நோக்கத்துடனும் அழைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்கு போர்ட் பகுதியில் நடந்த மிக மோசமான வன்முறைகளுக்கு பிறகே இந்த நிலைமையை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களால் பாதிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட அனைத்து தொர்டபிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...