3 5 scaled
உலகம்செய்திகள்

சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!

Share

சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் தொடுத்தது.

ஆனால், இருநாடுகளும் சமரசத்திற்கு வந்து தங்கள் தூதரக உறவை மீண்டும் தொடங்குவதாக கூட்டாக அறிவித்தன.

இந்த நிலையில், ஈரானின் சிஸ்டான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சரவான் நகரில் 9 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என பாகிஸ்தான் தூதர் முகமது முடாஸிர் திப்பி அடையாளம் காட்டியதன் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர், ”சரவனில் 9 பாகிஸ்தானியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த குடும்பங்களுக்கு தூதரகம் முழு ஆதரவை வழங்கும். இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க ஈரானுக்கு அழைப்பு விடுத்தோம்’ என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...