rtjy 89 scaled
உலகம்செய்திகள்

PhD படிக்க இங்கு Register செய்யுங்கள்.. நித்யானந்தாவின் புது அறிவிப்பு

Share

PhD படிக்க இங்கு Register செய்யுங்கள்.. நித்யானந்தாவின் புது அறிவிப்பு

நித்யானந்தா தரப்பில் இருந்து பி.எச்.டி படிப்பு பற்றிய புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதுடன், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை அறிவித்தார்.

மேலும், பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் ரீதியாக ஒப்பந்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

கைலாசா சார்பில் ஐ.நா சபை மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்து கொண்டதும் சர்ச்சையை கிளப்பியது.

அண்மையில், பராகுவே நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கைலாசா நாட்டுடன் செய்த ஒப்பந்தம் தொடர்பாக அவரது பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “கைலாசாவுக்கு வர முடியாது என்கிற கவலையை விடுங்கள். கைலாசா உங்களை தேடி வரப்போகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “நீங்கள் எங்கு இருந்தாலும் பட்டங்கள் மற்றும் முனைவர் பட்ட வாய்ப்புகளுடன் கைலாசா உங்களை தேடி வரும். ஆன்மீகமும் அறிவியலும் கொண்ட பி.எச்.டி படிப்பு மேற்கொள்ள உங்களை தேடி வரும்.

இன்றே பி.எச்.டி. பயில நித்யானந்தா இந்து பல்கலைக்கழகத்தில் சேர பதிவு செய்யுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது, இந்த புதிய அறிவிப்பு சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...