3 scaled
உலகம்செய்திகள்

கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?

Share

கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?

இந்திய மாநிலமான கேரளாவில், இஸ்ரேலிய பெண் ஒருவர் கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன். இவர் ஒரு யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (36) என்ற பெண் ஒருவர் வந்திருந்தார்.

இதில் ஸ்வத்வா, கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கியிருந்து யோகா கற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் கழுத்தறுத்து நிலையில் சடலமாக ஸ்வத்வா கிடந்துள்ளார். அதேபோல, யோகா ஆசிரியர் கிருஷ்ண சந்திரனும் கழுத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஸ்வத்வாவின் உடலை மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த கிருஷ்ண சந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்துவிட்டு கிருஷ்ண சந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கிருஷ்ண சந்திரன் பணியாற்றிய போது, ஸ்வத்வாவை கேரளாவுக்கு தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...