சிலியில் தன்பாலினம் (ஓரினைச்சேர்க்கையாளர்) திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் இச்சட்டமானது அங்கீகரிக்கப்பட்டது.
இச்சட்டத்தின் மூலம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு உதவுகிறது.
சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட காலமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் இயற்றவிடாமல் முடக்கி வந்த நிலையில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாராமரியமாக கத்தோலிக்க நாடான சிலியில் தன்பாலின திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment