10 scaled
உலகம்செய்திகள்

ஐக்கிய நாடுகள் ஹெலிகொப்டரை தாக்கி ஐவரை கடத்தி சென்ற கிளர்ச்சியாளர்கள்

Share

சோமாலியாவில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று தங்கள் எல்லைக்குள் தரையிறங்கிய நிலையில் அல்-ஷபாப் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஹெலிகொப்டர் ஒன்று சோமாலியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. இந்த நிலையில் தொடர்புடைய ஹெலிகொப்டரை சுற்றிவளைத்து தாக்குதல் தொடுத்த அல்-ஷபாப் போராளிகள் ஒருவரை கொன்றுள்ளதுடன் ஐவரை கடத்தி சென்றுள்ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக ஜிந்தீரே கிராமத்தில் தொடர்புடைய ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வெளிநாட்டவர்களும் ஒரு சோமாலிய நாட்டவரும் அந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர்.

மட்டுமின்றி தப்பிக்க முயன்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவரை காணவில்லை என்றும் உள்ளூர் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்த ஹெலிகொப்டரில் பயணித்தவர்கள் எந்த நாட்டினர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

அந்த ஹெலிகொப்டரானது மருத்துவ அவசரம் காரணமாக விசில் நகரத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்கள் கிராமப்புறங்களில் சில பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் சோமாலிய இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இன்னும் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவின் சில பகுதிகள் உள்ளது. மேலும் தலைநகர் மொகடிஷுவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்லாமிய அரசை நிறுவும் முயற்சியில் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து ஆண்டுக்கு பல மில்லியன் டொலர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையும் முன்னெடுத்து வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...