9 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்மக்களை மொத்தமாக வெளியேற்ற ஜேர்மனியில் ரகசிய ஆலோசனைக் கூட்டம்

Share

மில்லியன் கணக்கான புலம்பெயர்மக்களை நாடு கடத்தும் திட்டம் தொடர்பில் ஜேர்மனியில் தீவிர வலதுசாரிகள் குழு ஆலோசனக் கூட்டம் முன்னெடுத்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தகவல் வெளியான நிலையில் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தீவிர வலதுசாரிகளான AfD மற்றும் neo-Nazis அரசியல்வாதிகள் குழு ஒன்று பெர்லின் நகருக்கு வெளியே குடியிருப்பு ஒன்றில் ரகசிய கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதில் புலம்பெயர் மக்கள் உட்பட ஜேர்மானியர் அல்லாத இனப் பின்னணி கொண்ட மக்கள் மில்லியன் கணக்கானோரை வெளியேற்றும் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜேர்மனியில் யாரும் இனப் பாகுபாடு காட்ட அனுமதிக்க முடியாது என்று சேன்ஸலர் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 20 அரசியல்வாதிகள் இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது.

மேலும், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா முழுவதும் உள்ள நவ-நாஜிக்களில் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இந்த ரகசிய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அத்துடன் CDU கட்சியின் இரு உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஜேர்மனியின் குடிமக்களாக இருந்தாலும், ஜேர்மன் அல்லாத இனப் பின்னணியைக் கொண்டவர்களை நாடுகடத்தவே இந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொள்கையளவில் திட்டத்தின் மீது எந்த ஆட்சேபனையும் எந்த உறுப்பினர்களும் எழுப்பவில்லை என்றும், அதன் சாத்தியக்கூறு பற்றிய சந்தேகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...