tamilni 114 scaled
உலகம்செய்திகள்

போருக்கு தயாராக இருக்கின்றோம்: போலந்து அறிவிப்பு

Share

போருக்கு தயாராக இருக்கின்றோம்: போலந்து அறிவிப்பு

போர் அச்சுறுத்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை போலந்து இராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய போர் சூழலில் போலந்து மீதான போர் அச்சுறுத்தல் தொடர்பில் போலந்து பாதுகாப்பு மந்திரி விளாடிசா கோனேக் காமிஸ் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பதிலளிக்கையில்,

போர் அச்சுறுத்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை போலந்து இராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அனைத்து வகையான சூழ்நிலைகளையும் நான் எதிர்பார்க்கிறேன். அதில் மோசமானவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.

இன்று நாம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாதுகாப்பு மந்திரியின் பணி அதுதான். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கின்றோம். இதனை வெறும் பேச்சுக்காக நான் சொல்லவில்லை.

போலந்து இராணுவம் போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது.

பெரியளவிலான ஆயுதக்கொள்முதல் மிகவும் முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு இராணுவ வீரருக்கான தனிப்பட்ட உபகரணங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...