புடினின் உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் ரஷ்ய இராணுவம்
உலகம்செய்திகள்

புடினின் உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் ரஷ்ய இராணுவம்

Share

புடினின் உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் ரஷ்ய இராணுவம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவுகளுக்கு ரஷ்ய இராணுவம் அடிபணிய மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு இராணுவ தளபதிகளால் காட்டப்படும் கீழ்ப்படியாமை தற்போது இராணுவ வீரர்களிடமும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவன பரிசோதனை தளபதிகள் மத்தியில் உள்ள கீழ்ப்படியாமை அவர்களின் சில வீரர்களுக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டுகின்றது.

இராணுவ தளபதிகள் மத்தியில் கீழ்ப்படியாமை அதிகரித்து வருவது ரஷ்ய இராணுவ தலைமையை இன்னும் வெளிப்படையாக எதிர்க்க மற்ற உயர்மட்ட அதிகாரிகளை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது.

ஏற்கனவே உக்ரைன் போரில் ரஷ்ய படைகளுக்கு உதவிய தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு ரஷ்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றது. இதன்பின்னர் பெலாரஸ் அதிபரின் சமரசத்தால் கிளர்ச்சியை கைவிட்டது. இதன் மூலம் புடினுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகியுள்ளது.

இந்த நிலையில் புடினின் உத்தரவுக்கு ரஷ்ய இராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...