8 27
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின்

Share

மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலை இறுக்கமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் போரின் விளிம்பில் காணப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்குபற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், ஒரு வருடத்திற்கு முன்னால் காசாவில் தொடங்கிய இராணுவ நடவடிக்கை தற்போது லெபனான் வரை பரவியிருப்பதால் பிராந்தியத்தில் உள்ள மற்றைய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பலஸ்தீனம் சுதந்திர நாடாக மாறும் வரை மத்திய கிழக்கில் பதற்றம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பலஸ்தீனத்தில் ஏற்படுத்துவதற்கான முக்கிய கோரிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இரு நாடுகளின் கொள்கையை செயற்படுத்துவதாகும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

 

இந்த தீர்மானம் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் என அவர் கூறியுள்ளார். குறித்த மாநாட்டில் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...