24 666d4e39c22a1
உலகம்செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்

Share

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) இடையிலான போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கினால் அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உக்ரைனிடம் நிபந்தனைகளையோ கோரிக்கைகளையோ புட்டினால் முன்வைக்க முடியாது என்றும் அவரால் தொடங்கப்பட்ட போரை அவரே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...