23
உலகம்செய்திகள்

திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த புடின்! எவ்வளவு மணிநேரம்?

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி வருகின்றனர். கடந்த ஈஸ்டர் நாளில் தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்திய ரஷ்யா, அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது.

எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறினார்.

இந்த நிலையில், புடின் உக்ரைனுக்கு எதிரான போரை மூன்று நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில், சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.

இதனை குறிக்கும் வகையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மே 8ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை என 72 மணிநேரம் இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இந்தக் காலத்திற்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் தரப்பு இந்த முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று ரஷ்யா நம்புகிறது” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...