23
உலகம்செய்திகள்

திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த புடின்! எவ்வளவு மணிநேரம்?

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி வருகின்றனர். கடந்த ஈஸ்டர் நாளில் தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்திய ரஷ்யா, அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது.

எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறினார்.

இந்த நிலையில், புடின் உக்ரைனுக்கு எதிரான போரை மூன்று நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில், சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.

இதனை குறிக்கும் வகையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மே 8ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை என 72 மணிநேரம் இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இந்தக் காலத்திற்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் தரப்பு இந்த முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று ரஷ்யா நம்புகிறது” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...