11 9
உலகம்செய்திகள்

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

Share

பாலஸ்தீன இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(30) கொழும்பு கொம்பனித்தெரு டிமெல் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பாலஸ்தீனத்தினுடைய சுதந்திரத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இஸ்ரேல் நாட்டிற்கும் அதன் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராகவும், அமெரிக்க நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவும் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகரசபை வேட்பாளராக போட்டிபோட்ட நிஷா சாருக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சிவில் செயற்பாட்டாளர்கள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், இலங்கையின் ஆசிரியர் சங்க செயலாளர் உட்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....