11 9
உலகம்செய்திகள்

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

Share

பாலஸ்தீன இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(30) கொழும்பு கொம்பனித்தெரு டிமெல் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பாலஸ்தீனத்தினுடைய சுதந்திரத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இஸ்ரேல் நாட்டிற்கும் அதன் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராகவும், அமெரிக்க நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவும் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகரசபை வேட்பாளராக போட்டிபோட்ட நிஷா சாருக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சிவில் செயற்பாட்டாளர்கள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், இலங்கையின் ஆசிரியர் சங்க செயலாளர் உட்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...