உலகம்செய்திகள்

ட்ரம்ப் – மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

Share
10 31
Share

ட்ரம்ப் – மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், மற்றும் எலன் மஸ்குக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப், மற்றும் மஸ்க் கூட்டினைவால் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் “பிரசிடெண்ட்ஸ் டே” கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை என்பதால், அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களை நினைவுகூர்ந்து மக்கள் நன்றி செலுத்துவர்.

எனினும் இந்த ஆண்டுபிரசிடெண்ட்ஸ் டே நிகழ்வில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ட்ரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...