tamilni 4 scaled
உலகம்

சொன்னதே நடந்தது… பாரீஸ் ஒலிம்பிக்ஸ் உட்பட பல சம்பவங்களை பட்டியலிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

Share

சொன்னதே நடந்தது… பாரீஸ் ஒலிம்பிக்ஸ் உட்பட பல சம்பவங்களை பட்டியலிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் பிரேசில் நாட்டின் ஜோதிடர் ஒருவர் இந்த ஆண்டில் இதுவரை தாம் கணித்துள்ளதில் 6 சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகம் இணையப் போரின் விளிம்பில் தத்தளிப்பதாக எழுந்துள்ள அச்சங்களுக்கு மத்தியில், தாம் இதுவரை சொன்னதே நடந்துள்ளது என வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

2024ல் உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் என்றார் வாழும் நாஸ்ட்ராடாமஸ். பலர் ஏளனம் செய்து புறக்கணிக்க, உலகம் மொத்தம் குழப்பத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய மைக்ரோசாப்ட் செயலிழப்பு நடந்தேறியது.

இதனால் மூன்று நாட்களுக்கு மேல் செய்தி ஊடக நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், பெரும் வணிக வளாகங்கள் என மொத்தமும் ஸ்தம்பித்தது.

தற்போது வரையில் மைக்ரோசாப்ட் செயலிழப்பு மீளவில்லை என்றே கூறப்படுகிறது. Athos Salomé என்ற வாழும் நாஸ்ட்ராடாமஸ் தான் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் முதல் முறையாக உலகை எச்சரித்தவர்.

எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவார் என்றும் இவர் கணித்திருந்தார். கத்தார் கால்பந்து உலகக் கிண்ணம் முதல் யூரோ கிண்ணம் யார் வெல்வார் என்பதுடன், ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணம் கூட இவர் கணித்தது போன்றே நிறைவேறியது.

தற்போது பாரீஸ் ஒலிம்பிக் குளறுபடிகள் உட்பட தமது மேலும் 5 கணிப்புகள் உறுதியாகியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் தென் கொரியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் மீது வடகொரியா தாக்குதல் முன்னெடுத்துள்ளதும் அவர்களின் VPN மென்பொருளில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் தாம் ஏற்கனவே கணித்துள்ளதாக வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொன்று Safari, Chrome மற்றும் Firefox போன்ற இணைய உலாவிகள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என எச்சரித்திருந்தார். மூன்றாவதாக கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் குறித்து அவர் எச்சரித்திருந்தார்.

சமீபத்தில் தான் இந்தியாவின் wazirx கிரிப்டோகரன்சி நிறுவனம் இணைய தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 230 மில்லியன் டொலர் மதிப்பிலான இழப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் யார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

பாரீஸ் ஒலிம்பிக் தொடர்புடைய இணைய அமைப்புகள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இதுவென்றே Athos Salomé தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, இணைய பாதுகாப்பை பலப்படுத்தியதால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Labubu Dolls 1200x675px 16 07 25 1000x600 1
உலகம்செய்திகள்

லபுபு பொம்மை மோகம் குறைகிறதா? – பொப் மார்ட் உரிமையாளர் வாங் நிங்கிற்கு $11 பில்லியன் இழப்பு!

உலகம் முழுவதும் வைரலாகிய ‘லபுபு’ (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...