5 scaled
உலகம்செய்திகள்

இளவரசி டயானாவின் வீடு வாடகைக்கு… வெளியான செய்தி

Share

இளவரசி டயானாவின் வீடு வாடகைக்கு… வெளியான செய்தி

பிரித்தானிய இளவரசி டயானாவின் குழந்தை பருவ வீட்டினை அவரது சகோதரர் தற்போது வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ் ஸ்பென்சர் இணைய பக்கத்தில் இது தொடர்பில் பதிவு செய்துள்ளார். ஆனால் எலிசியன் எஸ்டேட்ஸ் நிர்வாகம் வாடகை கட்டணத்தை வெளியிடவில்லை.

1688ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மாளிகையானது ஸ்பென்சர் குடும்பத்தினரின் பரம்பரை குடியிருப்பாகவே இருந்துள்ளது. மிகப்பெரிய உணவருந்தும் அறை, ஒரு தேவாலயம், பில்லியர்ட் அறைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் தொகுப்பு என இந்த மாளிகையில் காணப்படுகிறது.

எலிசியன் எஸ்டேட்ஸ் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஓவல் ஏரி பகுதியிலேயே 1997ல் இளவரசி டயானா அடக்கம் செய்யப்பட்டார். அதனால், தற்போது வாடகைக்கு விடப்பட்டாலும், கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியானது வாடகைதாரர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

2013ல் ஒரு இரவுக்கு 25,000 பவுண்டுகள் கட்டணத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதித்த விவகாரத்தில் ஏர்ல் ஸ்பென்சர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...