5 scaled
உலகம்செய்திகள்

இளவரசி டயானாவின் வீடு வாடகைக்கு… வெளியான செய்தி

Share

இளவரசி டயானாவின் வீடு வாடகைக்கு… வெளியான செய்தி

பிரித்தானிய இளவரசி டயானாவின் குழந்தை பருவ வீட்டினை அவரது சகோதரர் தற்போது வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ் ஸ்பென்சர் இணைய பக்கத்தில் இது தொடர்பில் பதிவு செய்துள்ளார். ஆனால் எலிசியன் எஸ்டேட்ஸ் நிர்வாகம் வாடகை கட்டணத்தை வெளியிடவில்லை.

1688ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மாளிகையானது ஸ்பென்சர் குடும்பத்தினரின் பரம்பரை குடியிருப்பாகவே இருந்துள்ளது. மிகப்பெரிய உணவருந்தும் அறை, ஒரு தேவாலயம், பில்லியர்ட் அறைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் தொகுப்பு என இந்த மாளிகையில் காணப்படுகிறது.

எலிசியன் எஸ்டேட்ஸ் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஓவல் ஏரி பகுதியிலேயே 1997ல் இளவரசி டயானா அடக்கம் செய்யப்பட்டார். அதனால், தற்போது வாடகைக்கு விடப்பட்டாலும், கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியானது வாடகைதாரர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

2013ல் ஒரு இரவுக்கு 25,000 பவுண்டுகள் கட்டணத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதித்த விவகாரத்தில் ஏர்ல் ஸ்பென்சர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...