கண்டிப்பாக செய்வோம்... ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் அதிரடி
உலகம்செய்திகள்

கண்டிப்பாக செய்வோம்… ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் அதிரடி

Share

கண்டிப்பாக செய்வோம்… ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் அதிரடி

வாக்னர் கூலிப்படைக்கு தற்போது ஆள் சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் செய்வோம் என எவ்ஜெனி பிரிகோஜின் கூறியுள்ளார்.

ஜூன் மாத இறுதியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்ததிலிருந்து வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. வாக்னர் கூலிப்படையின் ஒரு பிரிவு, உக்ரைனில் தீவிரமான சண்டையை முன்வைத்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கிளர்ச்சிக்கு பின்னர், இவர்கள் பெலாரஸ் நாட்டிற்கு இடம்பெயரும் நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், கிளர்ச்சிக்கு பின்னர் 5 நாட்களில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் நேரடி சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், ஆப்பிரிக்க தலைவர்களுடனான உச்சி மாநாட்டில் எவ்ஜெனி பிரிகோஜின் காணப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களும் வெளியானது. இந்த நிலையில் தான் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள எவ்ஜெனி பிரிகோஜின்,

எங்களது அடுத்த பணிகளை இன்று நாங்கள் வரையறுக்க இருக்கிறோம், ரஷ்யாவின் பெருமையை அது நிலைநாட்டும் என்றார். முன்னதாக ஜூன் கிளர்ச்சிக்கு பின்னர், வாக்னர் கூலிப்படையினர் கிளர்ச்சியில் ஈடுபடாதவர்கள் தேசிய ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும்,

பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் முன்னெடுக்கப்படும் எனவும் ரஷ்யா அறிவித்திருந்தது. இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவிக்கையில், துரதரிஷ்டவசமாக வாக்னர் போராளிகளில் சிலர் மற்ற அதிகார அமைப்புகளுக்கு நகர்ந்து விட்டனர்,

ஆனால் அவர்கள் திரும்பி வர விரும்புவதாக அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழலில், ஆட்கள் பற்றாக்குறை இல்லை எனவும், ஆனால் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் ஆட்சேர்ப்பு பணிகளை முடுக்கிவிடவும் தயாராக இருப்பதாக எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...