ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி
உலகம்செய்திகள்

புடினின் கூலிப்படைத்தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Share

உக்ரைன் தாக்குதலில் மாஸ்கோ அதிகாரிகள் ரஷ்ய மக்களை தவறாக வழிநடத்துவதாக, புடினின் கூலிப்படைத் தலைவர் யேவ்ஜெனி பிரிகோலின் (Yevgeny Prigozhin) குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றரை ஆண்டை கடந்து நடந்து வரும் போரில் உக்ரைன் தாக்குதல் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பலமுறை கூறி வருகிறார்.

ஆனால், கிழக்கு உக்ரைன் பகுதியான பாக்முட் உட்பட நகரங்களில் பல மாதங்களாக புடினால் நிறுத்தப்பட்ட வாக்னர் கூலிப்படை ஒரு தாக்குதலை வழி நடத்தியது.

இந்நிலையில் வாக்னர் படையின் தலைவர் பிரிகோலின் உக்ரைன் தாக்குதல் தொடர்பில் மாஸ்கோவை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாஸ்கோவின் உயர்மட்ட அதிகாரிகள் உக்ரைனின் தாக்குதலின் போக்கைப் பற்றி ரஷ்யர்களை ஏமாற்றியதாக கூறிய அவர், போர்க்களத்தில் கீவ்வின் நகர்வை சுட்டிக்காட்டினார்.

மேலும், தங்கள் படை நடத்திய தாக்குதல் குறித்த உண்மையை பாதுக்காப்பு அமைச்சகம் கூறவில்லை என்றும், உக்ரேனிய துருப்புகளிடம் பிரதேசத்தை இழந்ததாகவும் பிரிகோலின் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பில் அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ஆடியோ செய்தியில், ‘அவர்கள் ரஷ்ய மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

அத்துடன் பல கிராமங்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறை இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரிகோலின், இவை அனைத்தும் அனைவரிடம் இருந்தும் முற்றிலும் மறைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 645227426bdff
செய்திகள்அரசியல்இலங்கை

13வது திருத்தம் விவாதத்தை நிறுத்துங்கள்: சுயநிர்ணய உரிமைக்கு ஐ.நா. தீர்மானம் 1514-ன் கீழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பு!

இலங்கையின் காலனித்துவக் கட்டமைப்புக்குள் தமிழர்களைச் சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள்...

62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...