tamilniv 5 scaled
உலகம்செய்திகள்

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

Share

செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால், உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என உலகப் பொருளாதார மன்ற தலைவர் எச்சரித்துள்ளார்.

உலக பொருளாதார மன்றத்தின் 45வது வருடாந்த கூட்டம் சுவிட்சர்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளில் எண்ணெய் விலை உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு விலை உயர்வு ஏற்பட்டால் இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

இந்த விலை உயர்வு 10 முதல் 20 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலைமையை தவிர்க்க ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் விரைவாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...