rtjy 84 scaled
உலகம்செய்திகள்

தேர்தலில் போட்டியிடும் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு அதிர்ச்சி

Share

தேர்தலில் போட்டியிடும் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கும் நிலையில், எதிர்பாராத விதமான எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Baselஇல் உள்ள சுவிஸ் மக்கள் கட்சி தொடர்பில், சாரா (Sarah Regez, 29) என்னும் இளம்பெண் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆனால், தனக்கெதிராக துண்டுப்பிரதிகள் விநியோகிக்கபப்டுவது தொடர்பில் தகவலறிந்துள்ளார்.

”சாராவுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்பதே அந்த துண்டுப் பிரதிகளில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த துண்டுப் பிரதிகளை யார் வெளியிட்டார் என்பதை அறிந்த அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாரவுக்கெதிராக துண்டுப் பிரதிகளை வெளியிட்டது அவருடைய பாட்டி என தெரியவந்துள்ளது.

மேலும், இதன் பின்னனி தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிவந்துள்ளன.

சாராவின் பாட்டி, நீண்ட காலமாக அந்நாட்டின் உள்ளூர் கவுன்சிலில் Social Democrat கட்சியின் பிரதிநிதியாக இருந்துவருகிறார்.

தன் பேத்தி, வலதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளதை அறிந்து தான் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக தனது பேத்திக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...