puthiyathalaimurai 2023 09 87ead526 6524 44b1 9018 731bccf16f7f actq
உலகம்செய்திகள்

அர்ஜெண்டினாவின் பிரபல நடிகை சில்வினா லூனா மரணம்

Share

அர்ஜெண்டினாவின் பிரபல நடிகை சில்வினா லூனா மரணம்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அர்ஜெண்டினாவின் பிரபல நடிகை சில்வினா லூனா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அர்ஜென்டினாவின் மாடல் அழகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான நடிகை சில்வினா லூனா கடந்த 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

இதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி என்பவரை நடிகை சில்வினா லூனா அணுகியுள்ளார்.

ஆனால் இந்த ஒப்பனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு நடிகை சில்வினா லூனா-க்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக வாரத்தில் மூன்று முறை மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல நடிகை சில்வினா லூனா-வின் உடல்நிலை மோசமாகி வந்த நிலையில், உயிர்காக்கும் கருவிகள் மூலம் நடிகை சில்வினா லூனா சிகிச்சை பெற்றார்.

உயிரிழந்த நடிகை சில்வினா லூனா
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகை சில்வினா லூனா உயிரிழந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஒப்பனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...