24 65fbcdcfbd860
உலகம்செய்திகள்

ரிஷிக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்கும் திட்டம்

Share

பிரித்தானிய பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான தகவல் பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவண்ணம் உள்ளது.

இந்நிலையில், அத்திட்டம் பிசுபிசுத்துப்போனதாக நாடாளுமன்றத்துக்கே சென்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்ட பிரித்தானிய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ரிஷி சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான லீ ஆண்டர்சன் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட சில சர்ச்சைக் கருத்துகள், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக கொடுத்தவரான Frank Hester என்பவர் இனரீதியாக முன்வைத்த விமர்சனம், ருவாண்டா திட்டம் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பு என பல்வேறு விடயங்கள் பிரதமர் ரிஷிக்கு கடந்த சில வாரங்களாக பெரும் தொல்லையைக் கொடுத்துவருகின்றன.

ஆகவே, ரிஷி சுனக்குக்கு பதிலாக பென்னி மோர்டாண்ட் என்னும் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் பரவத்துவங்கின.

இந்நிலையில், பிரதமர் ரிஷி, கடைசி இருக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட ரிஷி, கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், தனக்கெதிரான சதிகளும், அதிருப்தியும், தன்னைக் காயப்படுத்தவில்லை என்றும், அவை அனைத்து கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே காயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் உரைக்குப் பின் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான Jonathan Gullis என்பவர், கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த காட்சிகளை நேரடியாகப் பார்த்த ஊடகவியலாளர்கள், ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்கும் திட்டம் பிசுபிசுத்துப்போனதாக தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், ரிஷிக்கு பதிலாக பென்னி மோர்டாண்ட் என்பவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படப்போவதாக கூறப்பட்ட விடயம் கட்டுக்கதை என்று கூறியுள்ள Beth Rigby என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், பென்னியைப் பொருத்தவரை தலைமைக்கு மிகவும் உண்மையாக இருப்பவர் என்றும் கடின உழைப்பாளி என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...