பெரு நாட்டில் அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 5. 2 ஆகப் பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 12 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
தொலைக்காட்சி நிலையங்கள், நிலநடுக்கத்தின் போது வீதியோர மின் விளக்குகள் அணைந்தது, கடல் சீற்றம் குறித்த காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன.
#WorldNews
Leave a comment