24 66758d7e33f73
உலகம்செய்திகள்

ரஷ்யாவில் உயர்கல்வி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் மோசடியில் சிக்கிய நபர்

Share

ரஷ்யாவில் உயர்கல்வி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் மோசடியில் சிக்கிய நபர்

ரஷ்யாவில் உயர்கல்வி வழங்குவதாகக் கூறி இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.

சந்தேகநபர் வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் உயர் கல்விக்காக கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஏமாற்றியதாக நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட விமானத் தடையைப் பயன்படுத்திய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக மாத்தறை தலைமையக பொலிஸாருக்கு 17 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸில் 02 முறைப்பாடுகளும், குருநாகல் பொலிஸில் 03 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், இவர் தொடர்பில் வாதுவ, அம்பாறை மற்றும் மொரட்டுவ பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரைக்கமைய நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்கவின் மேற்பார்வையில் அதிகாரிகள் குழுவினால் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...