1 31
உலகம்

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

Share

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

மதுபோதையில் இருக்கும்போது ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸார் கைது
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் மதுபோதையில் இருப்பதாக கூறப்படும் நபர் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில், ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்த அவர், உடனடியாக தண்டவாளத்தில் இருந்து காரை இறக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், தண்டவாளத்தில் கார் சிக்கியது. இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் உதவியுடன் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுத்தனர்.

பின்னர், அந்த நபர் காரை ஓட்டி தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...