உலகம்செய்திகள்

நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: மறக்க முடியாத சம்பவம்

tamilnaadij 1 scaled
Share

நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: மறக்க முடியாத சம்பவம்

மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறிய படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 பேர் கொண்ட குழுவை உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலின் ஊழியர்கள் மீட்டுள்ளனர்.

தொடர்புடைய 14 பேர்களும் அந்த சிறிய படகில் ஒருவார காலத்திற்கும் மேலாக நடுக்கடலில் தத்தளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராயல் கரீபியன் குழுமத்தால் இயக்கப்படும் Icon of the Seas என்ற உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலானது மெக்சிகோ வளைகுடாவில் பயணப்பட்ட நிலையில், சிறிய படகு ஒன்றில் சிலர் தத்தளிப்பதை கவனித்துள்ளனர்.

உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட கப்பல் ஊழியர்கள், அந்த 14 பேர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் அளித்துள்ளனர்.

தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பயணிகள் கப்பலானது மியாமியில் இருந்து ஹோண்டுராஸ் நோக்கிச் சென்ற போதே தொடர்புடைய சிறிய படகை எதிர்கொண்டுள்ளனர்.

இதனிடையே, மீட்பு நடவடிக்கையானது அமெரிக்க எல்லைக்கு வெளியே நடந்துள்ளதாகவும் மெக்சிகோ அதிகாரிகள் இந்த விவகாரத்தை விசாரிப்பதே முறை என்றும் அமெரிக்க கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட அனைவரும் அடுத்த நாள் ஹோண்டுராஸ் நகரம் ஒன்றில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாட்டவர்கள், அவர்களுக்கு என்ன ஆனது என்பது உள்ளிட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...