7 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Share

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

பிரான்சில் கடந்த மாதம் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிறகு, நாடு தீவிர பயங்கரவாத எதிர்ப்பு எச்சரிக்கையில் இருக்கும் நிலையில், பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, பாரீஸ் ரயில் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக, ரயில் நிறுத்தப்பட, ஆயுதங்களுடன் குவிந்த பொலிசார் பயணிகளை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.

அந்தப் பெண்ணை எச்சரித்தும் அவர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாகவும் தெரிவித்த பொலிசார், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில், அந்தப் பெண் மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பொலிசார் சோதனையிட்டபோது, அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பெண், 2021இல் இதேபோல் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு, தனது மன நல பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே பெண்ணாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

Share
தொடர்புடையது
image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...

image 1000x630 11
செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு: 10 பேருக்கு எதிராக இன்று வழக்கு விசாரணை ஆரம்பம் – சுமந்திரன் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்,...

image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான்...