7 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Share

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

பிரான்சில் கடந்த மாதம் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிறகு, நாடு தீவிர பயங்கரவாத எதிர்ப்பு எச்சரிக்கையில் இருக்கும் நிலையில், பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, பாரீஸ் ரயில் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக, ரயில் நிறுத்தப்பட, ஆயுதங்களுடன் குவிந்த பொலிசார் பயணிகளை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.

அந்தப் பெண்ணை எச்சரித்தும் அவர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாகவும் தெரிவித்த பொலிசார், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில், அந்தப் பெண் மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பொலிசார் சோதனையிட்டபோது, அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பெண், 2021இல் இதேபோல் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு, தனது மன நல பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே பெண்ணாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய 5 பேர் கைது! – கடமையில் தவறிய மத்தல பொலிஸ் அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த...

image 1200x800 15 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் உரை – இங்கிலாந்தில் கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட்...

image 1200x800 16 3
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிற்கு CID அழைப்பு! – சமன் ஏக்கநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பிணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு...

image 1200x800 22 1
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடிப்பு! – தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் பீதி; 3 கி.மீ தூரத்திற்குத் தடை!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலை இன்று...