34 7
உலகம்செய்திகள்

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

Share

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

பாரிஸ் (Paris) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் செல்பி எடுத்த போது சிரித்த முகத்துடன் காணப்பட்டதற்கான வட கொரிய (North Korea) டேபிள் டென்னிஸ் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய டேபிள் டென்னிஸ் வீரர்களான ரி-ஜோங் சிக், கிம் கும் யாங் மீதே குறித்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

வட கொரிய விளையாட்டு வீரர்கள் 2024 கோடைகால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சில பதக்கங்களையும் பெற்றனர்.

இதன்போது தென் கொரிய (South korea) விளையாட்டு வீரருடன் வடகொரிய விளையாட்டு வீரர்கள் Selfie எடுத்துக்கொண்ட தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவின.

தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் நிலவினாலும், இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

அப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, தென் கொரிய விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்ததற்காக விளையாட்டு வீரர்களுக்கு எதிராக கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் கூறப்பட்டன.

போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் செல்பி எடுத்தற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...