34 7
உலகம்செய்திகள்

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

Share

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

பாரிஸ் (Paris) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் செல்பி எடுத்த போது சிரித்த முகத்துடன் காணப்பட்டதற்கான வட கொரிய (North Korea) டேபிள் டென்னிஸ் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய டேபிள் டென்னிஸ் வீரர்களான ரி-ஜோங் சிக், கிம் கும் யாங் மீதே குறித்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

வட கொரிய விளையாட்டு வீரர்கள் 2024 கோடைகால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சில பதக்கங்களையும் பெற்றனர்.

இதன்போது தென் கொரிய (South korea) விளையாட்டு வீரருடன் வடகொரிய விளையாட்டு வீரர்கள் Selfie எடுத்துக்கொண்ட தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவின.

தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் நிலவினாலும், இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

அப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, தென் கொரிய விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்ததற்காக விளையாட்டு வீரர்களுக்கு எதிராக கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் கூறப்பட்டன.

போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் செல்பி எடுத்தற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...