34 7
உலகம்செய்திகள்

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

Share

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

பாரிஸ் (Paris) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் செல்பி எடுத்த போது சிரித்த முகத்துடன் காணப்பட்டதற்கான வட கொரிய (North Korea) டேபிள் டென்னிஸ் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய டேபிள் டென்னிஸ் வீரர்களான ரி-ஜோங் சிக், கிம் கும் யாங் மீதே குறித்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

வட கொரிய விளையாட்டு வீரர்கள் 2024 கோடைகால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சில பதக்கங்களையும் பெற்றனர்.

இதன்போது தென் கொரிய (South korea) விளையாட்டு வீரருடன் வடகொரிய விளையாட்டு வீரர்கள் Selfie எடுத்துக்கொண்ட தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவின.

தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் நிலவினாலும், இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

அப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, தென் கொரிய விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்ததற்காக விளையாட்டு வீரர்களுக்கு எதிராக கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் கூறப்பட்டன.

போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் செல்பி எடுத்தற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...