34 7
உலகம்செய்திகள்

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

Share

செல்பிக்கு சிரித்ததற்காக வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்

பாரிஸ் (Paris) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் செல்பி எடுத்த போது சிரித்த முகத்துடன் காணப்பட்டதற்கான வட கொரிய (North Korea) டேபிள் டென்னிஸ் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய டேபிள் டென்னிஸ் வீரர்களான ரி-ஜோங் சிக், கிம் கும் யாங் மீதே குறித்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

வட கொரிய விளையாட்டு வீரர்கள் 2024 கோடைகால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சில பதக்கங்களையும் பெற்றனர்.

இதன்போது தென் கொரிய (South korea) விளையாட்டு வீரருடன் வடகொரிய விளையாட்டு வீரர்கள் Selfie எடுத்துக்கொண்ட தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவின.

தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் நிலவினாலும், இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

அப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, தென் கொரிய விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்ததற்காக விளையாட்டு வீரர்களுக்கு எதிராக கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் கூறப்பட்டன.

போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் செல்பி எடுத்தற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...