tamilni Recovered Recovered 2 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் செய்த தவறுக்கு பாலஸ்தீன மக்களை பழி வாங்குவதா? கவலை தெரிவிக்கும் பிரான்ஸ்

Share

ஹமாஸ் செய்த தவறுக்கு பாலஸ்தீன மக்களை பழி வாங்குவதா? கவலை தெரிவிக்கும் பிரான்ஸ்

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய அட்டூழியங்களுக்கு பாலஸ்தீன மக்களை பழிவாங்கக் கூடாது என்று பிரான்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளது.

காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலின் நடவடிக்கை கவலையளிப்பதாகவும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீன மக்கள் பழிவாங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரகம், ஹமாஸ் படைகள் செய்த தவறுக்கு பாலஸ்தீன மக்கள் கடந்த ஒரு மாத காலமாக பெரும் விலகி கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையை முற்றுகையிட்டிருந்த இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை டாங்கிகளுடன் மருத்துவமனைக்குள் அத்துமீறியது. ஹமாஸ் படைகளுக்கு எதிரான நடவடிக்கை இதுவென இஸ்ரேல் குறிப்பிட்டாலும், உள்ளே ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பிற பொதுமக்கள் சிக்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், மருத்துவமனை உள்ளிட்ட உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க இஸ்ரேல் முன்வர வேண்டும் எனவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரகம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் காசாவில் பொதுமக்கள் மீது குண்டுவீச்சை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...