1 2 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Share

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதை, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொண்டாடியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் வழிப்போக்கர்களுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளது.

அந்தக் குழு, தனது சமூக ஊடக சேனல்களில், பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பு வாழ்க என்று பதிவிட்டுள்ளது.

பெர்லினில் பாலஸ்தீனிய சமூகத்தினர் அதிகம் வாழும் Sonnenallee என்னும் இடத்தில், சுமார் 40 நபர்கள் கூடி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்து தடை செய்யப்பட்ட கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பலரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களின்போது இரண்டு பொலிசார் காயமடைந்தனர்.

இதற்கிடையில், இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டு ஜேர்மானியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதுடன், குறைந்தது ஒரு ஜேர்மானியராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...