1 2 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Share

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதை, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொண்டாடியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் வழிப்போக்கர்களுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளது.

அந்தக் குழு, தனது சமூக ஊடக சேனல்களில், பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பு வாழ்க என்று பதிவிட்டுள்ளது.

பெர்லினில் பாலஸ்தீனிய சமூகத்தினர் அதிகம் வாழும் Sonnenallee என்னும் இடத்தில், சுமார் 40 நபர்கள் கூடி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்து தடை செய்யப்பட்ட கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பலரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களின்போது இரண்டு பொலிசார் காயமடைந்தனர்.

இதற்கிடையில், இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டு ஜேர்மானியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதுடன், குறைந்தது ஒரு ஜேர்மானியராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...