1 1 11 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்..! மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி

Share

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்..! மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவில் மாணவர்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து நடைபெற்று வந்த நிலையில், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது மற்றும் பிணைக் கைதிகளை விடுவிப்பது ஆகியவற்றிற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர் நடவடிக்கையில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேரடியாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் துருக்கி, சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு துணையாக நிற்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பொதுமக்களில் ஒரு பிரிவினரும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு பொதுமக்கள் பிரிவினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது சிட்னி நகரிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

பேரணியில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க கோரி முழக்கமிட்ட படியே மாணவர்கள் சிட்னி மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...