1 1 11 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்..! மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி

Share

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்..! மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவில் மாணவர்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து நடைபெற்று வந்த நிலையில், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது மற்றும் பிணைக் கைதிகளை விடுவிப்பது ஆகியவற்றிற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர் நடவடிக்கையில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேரடியாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் துருக்கி, சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு துணையாக நிற்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பொதுமக்களில் ஒரு பிரிவினரும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு பொதுமக்கள் பிரிவினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது சிட்னி நகரிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

பேரணியில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க கோரி முழக்கமிட்ட படியே மாணவர்கள் சிட்னி மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...