Murder Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் இரகசியமாக நுழைந்த பாலஸ்தீன ஆர்வலர்கள்

Share

இஸ்ரேலுக்கு பிரித்தானியா வழங்கும் ஆதரவை எதிர்த்து, கடந்த மாதம் மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு இராணுவ விமானத் தளத்திற்குள் நுழைந்து இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதற்காக நான்கு பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு பாதகமான நோக்கத்திற்காக தெரிந்தே தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழைய சதி செய்தல் மற்றும் குற்றவியல் சேதத்தை ஏற்படுத்த சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.

இதன்படி 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு பேரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 20 அன்று மத்திய இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள விமானப்படை தளம் உடைக்கப்பட்டு எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு விமானங்கள் மீது சிவப்பு வண்ணப்பூச்சு தெளிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் பாலஸ்தீன நடவடிக்கை என்ற பிரச்சாரக் குழு இருப்பதாகக் கூறியுள்ளது.

இதன்படி பாலஸ்தீன நடவடிக்கையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆதரவளித்திருந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பிரைஸ் நார்டன் ரோயல் விமானப்படை தளத்தில் இரண்டு விமானங்களுக்கும் 7 மில்லியன் பவுண்டுகள் (9.55 மில்லியன் டொலர்) மதிப்புள்ள சேதத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்படுத்தியதாக பாதுகாப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...