Murder Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் இரகசியமாக நுழைந்த பாலஸ்தீன ஆர்வலர்கள்

Share

இஸ்ரேலுக்கு பிரித்தானியா வழங்கும் ஆதரவை எதிர்த்து, கடந்த மாதம் மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு இராணுவ விமானத் தளத்திற்குள் நுழைந்து இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதற்காக நான்கு பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு பாதகமான நோக்கத்திற்காக தெரிந்தே தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழைய சதி செய்தல் மற்றும் குற்றவியல் சேதத்தை ஏற்படுத்த சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.

இதன்படி 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு பேரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 20 அன்று மத்திய இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள விமானப்படை தளம் உடைக்கப்பட்டு எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு விமானங்கள் மீது சிவப்பு வண்ணப்பூச்சு தெளிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் பாலஸ்தீன நடவடிக்கை என்ற பிரச்சாரக் குழு இருப்பதாகக் கூறியுள்ளது.

இதன்படி பாலஸ்தீன நடவடிக்கையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆதரவளித்திருந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பிரைஸ் நார்டன் ரோயல் விமானப்படை தளத்தில் இரண்டு விமானங்களுக்கும் 7 மில்லியன் பவுண்டுகள் (9.55 மில்லியன் டொலர்) மதிப்புள்ள சேதத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்படுத்தியதாக பாதுகாப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...