Murder Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் இரகசியமாக நுழைந்த பாலஸ்தீன ஆர்வலர்கள்

Share

இஸ்ரேலுக்கு பிரித்தானியா வழங்கும் ஆதரவை எதிர்த்து, கடந்த மாதம் மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு இராணுவ விமானத் தளத்திற்குள் நுழைந்து இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதற்காக நான்கு பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு பாதகமான நோக்கத்திற்காக தெரிந்தே தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழைய சதி செய்தல் மற்றும் குற்றவியல் சேதத்தை ஏற்படுத்த சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.

இதன்படி 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு பேரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 20 அன்று மத்திய இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள விமானப்படை தளம் உடைக்கப்பட்டு எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு விமானங்கள் மீது சிவப்பு வண்ணப்பூச்சு தெளிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் பாலஸ்தீன நடவடிக்கை என்ற பிரச்சாரக் குழு இருப்பதாகக் கூறியுள்ளது.

இதன்படி பாலஸ்தீன நடவடிக்கையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆதரவளித்திருந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பிரைஸ் நார்டன் ரோயல் விமானப்படை தளத்தில் இரண்டு விமானங்களுக்கும் 7 மில்லியன் பவுண்டுகள் (9.55 மில்லியன் டொலர்) மதிப்புள்ள சேதத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்படுத்தியதாக பாதுகாப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...