Murder Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் இரகசியமாக நுழைந்த பாலஸ்தீன ஆர்வலர்கள்

Share

இஸ்ரேலுக்கு பிரித்தானியா வழங்கும் ஆதரவை எதிர்த்து, கடந்த மாதம் மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு இராணுவ விமானத் தளத்திற்குள் நுழைந்து இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதற்காக நான்கு பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு பாதகமான நோக்கத்திற்காக தெரிந்தே தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழைய சதி செய்தல் மற்றும் குற்றவியல் சேதத்தை ஏற்படுத்த சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.

இதன்படி 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு பேரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 20 அன்று மத்திய இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள விமானப்படை தளம் உடைக்கப்பட்டு எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு விமானங்கள் மீது சிவப்பு வண்ணப்பூச்சு தெளிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் பாலஸ்தீன நடவடிக்கை என்ற பிரச்சாரக் குழு இருப்பதாகக் கூறியுள்ளது.

இதன்படி பாலஸ்தீன நடவடிக்கையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆதரவளித்திருந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பிரைஸ் நார்டன் ரோயல் விமானப்படை தளத்தில் இரண்டு விமானங்களுக்கும் 7 மில்லியன் பவுண்டுகள் (9.55 மில்லியன் டொலர்) மதிப்புள்ள சேதத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்படுத்தியதாக பாதுகாப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...