18 2
உலகம்செய்திகள்

இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் 3 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு

Share

குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன்படி பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும், குறிப்பிட்ட விசாக்களை கொண்ட பாகிஸ்தானியருக்கு நேற்று தான் இந்தியாவை விட்டு வெளியேற கடைசி நாளாக இருந்தது.

அந்த வகையில் ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், பஞ்சாபில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 850 இந்தியர்கள் திரும்பியுள்ளனர்.

இதில், குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....