அரிய சாதனை படைத்த குடும்பம்
உலகம்செய்திகள்

அரிய சாதனை படைத்த குடும்பம்

Share

அரிய சாதனை படைத்த குடும்பம்

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே பிறந்த திகதி இருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? எப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கலாம்.

ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

பாகிஸ்தானின் லர்கானாவைச் சேர்ந்த அமீர் அலியின் குடும்பத்தினர் ஒரே திகதியில் பிறந்ததற்காக, அந்த குடும்பம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த அற்புதமான கதையை கின்னஸ் உலக சாதனை புத்தகம் பகிர்ந்துள்ளது.

அமீர் அலி பாகிஸ்தானின் லர்கானாவை பூர்வீகமாக கொண்டவர். அலியின் குடும்பம் அவரது மனைவி குதேஜா மற்றும் ஏழு குழந்தைகளைக் கொண்டது.

7 குழந்தைகளில் நான்கு பேர் இரட்டையர்கள். அனைவரும் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். தற்செயலாக எல்லோருடைய பிறந்தநாளும் ஆகஸ்ட் 1-ஆம் திகதி ஆகும்.

ஆமிர் மற்றும் குதேஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 தான் என்பது மற்றொரு ஆச்சரியம். அலி மற்றும் குதேஜா ஆகஸ்ட் 1, 1991-ல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த குடும்பம் இரண்டு அரிய சாதனைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, ஒரே திகதியில் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் பிறந்ததற்கான உலக சாதனை, மற்றொன்று அதே திகதியில் பிறந்த அதிக உடன்பிறப்புகளுக்கான சாதனை.

முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த கம்மின்ஸ் குடும்பம் ‘ஒரே திகதியில் பிறந்த பெரும்பாலான உடன்பிறப்புகள்’ என்ற சாதனையைப் படைத்தது. 1952 முதல் 1966 பிப்ரவரி 20-ஆம் திகதியில் கம்மின்ஸ் குடும்பத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. உலகில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே உதாரணம் இதுதான்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...