19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

Share

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி, அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள பயங்கரவாத ஏவுதளமே, இவ்வாறு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னர், தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது,

ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வரும் நிலையில் இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக, டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தானின் FATAH 1 நெடுந்தூர ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...