19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

Share

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி, அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள பயங்கரவாத ஏவுதளமே, இவ்வாறு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னர், தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது,

ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வரும் நிலையில் இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக, டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தானின் FATAH 1 நெடுந்தூர ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....